திமுக பேரணியில் காயமடைந்த மதுரை தொண்டர் மரணம்
சென்னை:
சென்னையில் கடந்த 12ம தேதி நடந்த திமுக பேரணியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்தமதுரையைச் சேர்ந்த திமுக தொண்டர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதையடுத்து இந்தப்பேரணியில் கலந்து கொண்டு இறந்து போன திமுகவினரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
பேரணியின் முடிவில் போலீசாருக்கும் திமுகவினருக்கும் பயங்கர கலவரம் ஏற்பட்டு சுப்பாக்கிச் சூடும்நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் 5 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில்இறந்தனர்.
பல போலீசாரும், திமுக தொண்டர்களும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவ்வாறு காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மதுரை 66-வது வட்ட திமுக பிரதிநிதி சவுந்தரபாண்டியனும்ஒருவர். இவர் மதுரை பசுமலை பகுதியைச் சேர்ந்தவர்.
இவர் கருணாநிதி கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்தார். இதையடுத்து இவர் அங்கிருந்ததொண்டர்கள் சிலரால் சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பிறகு அங்கிருந்து மதுரை கொண்டு வரப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டது.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சவுந்தரபாண்டியன் மரணமடைந்தார். இதையடுத்து திமுக பிரமுகர்கள் பலர் இரவதுஉடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இவரையும் சேர்த்து இதுவரை திமுக பேரணி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications