அம்பேத்கர் சிலைக்கு சேதம் - சிவகங்கை அருகே பதட்டம்
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் அம்பேத்கர் சிலைக்கு யாரோ சேதம் விளைைவித்து விட்டார்கள்.இதனால் அந்தப் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
அம்பேத்கர் சிலையின் முகப்பகுதி சேதமடைந்திருந்தது. மேலும் அந்தச் சிலையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளஇரும்புக் கதவுகளை தனியாக ரோட்டில் கிடந்தது.
இதையறிந்த அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை-ராமேஸ்வரம் சாலையில்போக்குவரத்து 5 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
மறியல் செய்த மக்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், ஆர்.டி.ஓ. சுப்ரமணியன் மற்றும் தாசில்தார்ஆரோக்கியசாமி ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் இந்தச்சிலை 4 முறை சேதப்படுத்தப்பட்டும் இதுவரை ஒரு குற்றவாளி கூட கைது செய்யப்படவில்லைஎன்று கூறி பொது மக்கள் சாலை மறியலைக் கைவிட மறுத்துவிட்டனர்.
பிறகு, புதிய சிலை அமைத்துத் தருவதாகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும் முயற்சியில்இறங்குவதாகவும் அதிகாரிகள் கூறிய பின்னர், அவர்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications