மனைவி அடித்துக் கொலை
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே வரதட்சணை கொடுமைக்கு மேலும் ஒரு பெண்பலியாகியுள்ளார். காமாட்சி என்ற தன் இளம் மனைவியை வரதட்சணை கேட்டுதுன்புறுத்தி அடித்துக் கொன்றிருக்கிறார் அவரது கணவன்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது ஊறல் என்ற கிராமம். இங்குவசித்து வருவபவர் ராமநாதன். இவரது மகன் செல்வம் (வயது 29).
செல்லவத்திற்கும், திண்டிவனம் அருகே உள்ள விநாயகபுரத்தைச் சேர்ந்த தனபால்என்வரின் மகள் காமாட்சிக்கும் (வயது 20) 3 வருடங்களுக்கு முன் திருமணம்நடந்தது.
இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
செல்வம் வரதட்சணை கேட்டு அடிக்கடி காமாட்சியை அடித்து துன்புறுத்தி வந்தார்.இதனால் குடும்பத்தில் தினமும் சண்டையும், சச்சரவும் இருந்து வந்தது.
சம்பவ தினத்தன்றும் காமாட்சியை தாய் வீட்டிற்கு சென்று வரதட்சணை வாங்கிவருமாறு அடித்தார் செல்வம். அடிதாங்காத காமாட்சி இறந்து போனார்.
இது குறித்து தவகல் அறிந்த திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர்.
திருமணமாகி 3 வருடமே ஆகியுள்ளதால் வரதட்சணை சட்டத்தின் கீழ் உதவி கலெக்டர்விசாரணை மேற்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications