இந்தியாவுடன் நல்லுறவை விரும்பும் ஆஸ்திரேலியா
டெல்லி:
அனைத்து துறைகளிலும் இந்தியாவுடன் சிறந்த, பலமான நட்புறவை ஆஸ்திரேலியா விரும்புகிறது என்றுஇந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் ராப் லாரி கூறியுள்ளார்.
இந்திய பிரதமர் வாஜ்பாய் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியா வருகிறார். நீண்ட காலத்திற்கு பிறகு இந்தியபிரதமர் ஒருவர் ஆஸ்திரேலியா வருகிறார். அவரது வருகையை ஆஸ்திரேலியா ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது.
வாஜ்பாய் ஆஸ்திரேலியா வரும் போது இந்திய-ஆஸ்திரேலிய நட்புறவு மேலும் வலுப்பெறும் என்ற நம்புகிறோம்.இந்தியா பெரிய நாடு. தெற்கு ஆசியாவில் இந்தியா முக்கிய பங்குவகிக்கிறது.
இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவை ஆஸ்திரேலியா எதிர்பார்க்கிறது. அப்பாவி மக்கள் பலரும்தினந்தோறும் கொல்லப்படுவதை தவிர்க்க ஜம்மு-காஷ்மீர் பகுதியில் அமைதி ஏற்பட வேண்டும். பாகிஸ்தான்எல்லை தாண்டிய வன்முறையில் ஈடுபடுவதாக இந்தியா கூறுவது மறுப்பதற்கில்லை.
அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ஆதரிக்கிறது. இந்தியாவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேண்டும்.
ஆஸ்திரேலியாவில் மேல் படிப்பைத் தொடர அதிக அளவில் இந்திய மாணவர்கள் வருகின்றனர். ஆஸ்திரேலியஅரசும் இந்திய மாணவர்கள் வருகையை வரவேற்கிறது என்றார் ராப் லாரி.