புனிதத் தீர்த்தங்களில் அஸ்தி கரைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வியாழக்கிழமை மரணமடைந்த மூப்பனாரின் அஸ்தி நாட்டிலுள்ள பல புண்ணியநதிகளிலும், கடலிலும் கரைக்கப்பட உள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனார் வியாழக்கிழமை அதிகாலைசென்னையிலுள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைமருத்துவமனையில் மரணமடைந்தார்.

மூப்பனாரின் உடல் வெள்ளிக்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.

மூப்பனார் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்திலிருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை)அஸ்தி சேகரிக்கப்படவிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை மூப்பனார் உடல் தகனம்செய்யப்பட்ட இடத்திலிருந்து பால் தெளித்து, வேத மந்திரங்கள் கூறப்பட்டுமூப்பனாரின் அஸ்தி சேகரிக்கப்படும்.

அதன் பின் அஸ்தி மூபபனாரின் சொந்த ஊரான சுந்தர பெருமாள்புரம், கபிஸ்தலம்ஆகிய ஊர்களில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

மூப்பனாரின் அஸ்தி நாட்டின் புண்ணிய நதிகள் பலவற்றிலும் கரைக்கப்பட உள்ளது.ராமேஸ்வர கடலிலும், கன்னியாகுமரி கடலிலும் மூப்பனாரின் அஸ்திகரைக்கப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+