ஜப்பான் ஹோட்டலில் வெடிவிபத்து- தீ: 43 பேர் பலி
டோக்கியோ:
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹோட்டலில் வெடி விபத்தும்அதைத் தொடர்ந்து பெரும் தீ விபத்தும் ஏற்பட்டதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
டோக்கியோ, குபுசிகோ மாவட்டத்தில் ஒரு பிரபலமான ஹோட்டல் உள்ளது. இங்குசூதாட்டமும் நடைபெறுவதுண்டு. இது ஒரு நான்கு மாடி கட்டிடம்.
இங்கு மூன்றாவது மாடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு (இந்தியநேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி) பலத்த சத்ததுடன் குண்டு வெடித்தது.இதனால் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மூன்றாவது மாடியில் பிடித்த தீ விரைவாககட்டிடம் முழுவதும் பரவியது. இதில் 43 பேர் மூச்சுத் திணறி கருகி உயிரிழந்தனர்.
27 பேர் கொல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் இறந்தவர்களின்எண்ணிக்கை 43 ஆக உயர்ந்து விட்டது என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்
விபத்தில் காயமடைந்த 47 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழந்தவர் எண்ணிக்கை மேலும்உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்திற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணைநடந்து வருகிறது. 3வது மாடியில் உள்ள ஒரு அறையை ஊழியர் திறந்தபோது அங்குமிகப் பெரிய வெடிவிபத்து ஏற்பட்டது. வெடித்தது குண்டா? காஸ் சிலிண்டரா என்பதுதெரியவில்லை.












Click it and Unblock the Notifications