த.மா.கா-காங்கிரஸ் இணைப்பு: குலாம்நபி ஆசாத் கருத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கிரசுடன் தமிழ் மாநில காங்கிரசை இணைப்பது குறித்து த.மா.காவின் புதியதலைவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர்குலாம்நபி ஆசாத் கூறினார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மூப்பனார் மருத்துவமனையில்அனுமதிக்கப்படுவதற்கு முன்பு பல முறை நான் அவரை சந்தித்து பேசினேன்.
உடல் நலம் அடைந்து தீவிர அரசியலுக்கு திரும்பியதும், த.மா.காவை காங்கிரசுடன்இணைக்கிறேன் என்று என்னிடம் மூப்பனார் கூறினார்.
2 கட்சிகளும் எப்போது இணையும் என்ற விவாதிப்பதற்கு இது ஏற்ற நேரம் இல்லை.த.மா.கா. காங்கிரசுடன் இணைப்பது குறித்த முடிவை த.மா.காவின் புதிய தலைமைதான்முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications