For Daily Alerts
Just In
ஆந்திரா: ரயில் நிலையத்தில் குண்டுவெடித்து 3 பேர் பலி
ஹைதராபாத்:
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் எலுறு ரயில் நிலையத்தில் தீவிரவாதிகள் எடுத்துச் சென்றவெடிகுண்டு வெடித்ததில் 3 தீவிரவாதிகள் பலியானார்கள்.
அப்போது அந்த ரயில் வந்துகொண்டிருந்த தண்டவாளத்திற்கு அருகேயுள்ள தண்டவாளம் வழியாக 3 பேர்எடுத்துச் சென்ற குண்டுகள் திடீரென வெடித்ததில் 3 பேரும் அந்த இடத்திலேயே பலியானார்கள்.
இவர்கள் 3 பேரும் தீவிரவாதிகள் என்று கருதப்படுகிறது. இவர்கள் எந்த தீவிரவாத அமைப்பினர் என்பதும், எந்தஇடத்தில் குண்டு வைக்கத் திட்டமிட்டார்கள் என்பதும் தெரியவில்லை.
இந்த குண்டுவெடிப்பில், ரயிலில் பயணம்செய்துகொண்டிருந்த 3 பேர் படுகாயமடைந்தனர்.
குண்டுவெடித்த இடத்தில் கிடந்த ஒரு துப்பாக்கியை போலீசார் கைப்பற்றி, இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
Comments
Story first published: Wednesday, September 5, 2001, 5:30 [IST]