வாஜ்பாய்க்கு "நோபல் பரிசு" வழங்க பரிந்துரை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

உலகின் மிக உயர்ந்த நோபல் பரிசுக்கு இந்திய பிரதமர் வாஜ்பாயின் பெயரை டெல்லியிலுள்ள "சர்வதேசவிழிப்புணர்வு மையம்" பரிந்துரை செய்துள்ளது.

அறிவியல், கலை, இலக்கியம், உலக அமைதி, மருத்துவம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு,ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் உலகின் மிக உயர்ந்த பரிசான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு இந்தப் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் வரும் அக்டோபர் மாதம் அறிவிக்கப்படும. டிசம்பர் 10ம்தேதியன்று நார்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் நடைபெறும் விழாவின்போது வழங்கப்படும்.

அண்டை நாடுகளுடன் அமைதியை ஏற்படுத்துவதற்காக, தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் இந்தியபிரதமர் வாஜ்பாய்க்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று "சர்வதேச விழிப்புணர்வுமையம்" பரிந்துரை செய்துள்ளது.

இதற்கான பரிந்துரைக் கடிதம், நோபல் பரிசு நிறுவன இயக்குனருக்கு, இம்மையத்தின் தலைவர் முங்கேரியால்அனுப்பப்பட்டுள்ளது.

"ரஷ்யாவின் முன்னாள் அதிபர் கார்பசேவ், பாலஸ்தீன இயக்கத் தலைவர் யாசர் அராபத், தென்னாப்பிரிக்கதலைவர் நெல்சன் மண்லோ ஆகியோரோடு ஒப்பிடத்தக்கவர் வாஜ்பாய். அவர்கள் போலவே வாஜ்பாயும் தனதுஅண்டை நாட்டுடன் சமரசம் நிலவ பாடுபட்டு வருபவர் வாஜ்பாய். அவர்கள் பாதையில் செல்லும் வாஜ்பாயுக்கும்உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்" என்று அக்கடிதத்தில் முங்கேரி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+