For Daily Alerts
Just In
தனித்துப் போட்டியா - பா.ஜ.க. விளக்கம்
நாகர்கோவில்:
உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதாஎன்பது குறித்து மயிலாடுதுறையில் நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று பாரதீயஜனதாக் கட்சியின் தமிழ் மாநிலத் துணைத் தலைவர் வேலாயுதம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு பா.ஜ.க. வலுவுடன் உள்ளது. இருப்பினும் தனித்துப்போட்டியிடுவதா அல்லது திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா என்பது குறித்து மயிலாடுதுறைகூட்டத்தில் பேசி முடிவு செய்யப்படும்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளமாட்டோம். நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது உறுதியாகவும்,நம்பிக்கையுடனும் இருப்பவர்கள் என்றார் வேலாயுதம்.
Comments
Story first published: Thursday, September 6, 2001, 5:30 [IST]