ஜெ. அப்பீல் மீதான விசாரணைக்கு புது நீதிபதி - உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி:
டான்சி வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த ஜெயலலிதாவின் 3 மேல் முறையீட்டு மனுக்களைவிசாரித்து வரும் நீதிபதி பாலசுப்பிரமணியத்துக்குப் பதிலாக வேறு ஒரு நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்றுஇன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனுக்களில் மீதான விசாரணை கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது. ஆனால், இவ்வழக்கின் சிறப்புவழக்கறிஞர் வெங்கடபதி உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கின் அடிப்படையில், இந்த வழக்குவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இந்தத் தடையை எதிர்த்து, ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் பரூச்சா, பிரஜேஸ்குமார் மற்றும் அசோக் பான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதாவின் 3 மேல் முறையீட்டு மனுக்கள், ஏற்கனவே இதற்காக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிக்குப் பதிலாகவேறு ஒரு நீதிபதிக்கு மாற்றப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தப் புது நீதிபதி யார் என்றுசென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ள நீதிபதி முடிவு செய்வார் என்றும்நீதிபதிகள் பெஞ்ச் கூறியது.
இந்த 3 மனுக்கள் சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும், அடுத்த ஒரு வாரத்திற்குள் வழக்கறிஞர்வெங்கடபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், ஜெயலலிதாவின் இந்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை அக்டோபர் மாதம் 1ம் தேதிக்கு முன்நடைபெறக் கூடாது என்றும் இந்த நீதிபதிகள் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
"எம்.எல்.ஏவாக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேதி நெருங்கி வருவதால், விசாரணையை இன்னும்முன்னதாக ஆரம்பிப்பதற்கு உத்தரவிட வேண்டும்" என்று ஜெயலலிதாவின் வழக்கறிஞர் வேணுகோபால்நீதிபதிகளிடம் கேட்டுக் கொண்டார்.
அதற்கு நீதிபதிகள், "அதெல்லாம் எங்களுக்குப் புரிகிறது. அதற்காக கோர்ட் நீதி வழங்காமல் போகாது" என்று கூறி,அவருடைய வேண்டுகோளை ஏற்க மறுத்து விட்டனர்.












Click it and Unblock the Notifications