திருமண வீட்டில் விஷச்சாராயம் அருந்திய 6 பேர் பலி
சென்னை:
சென்னை அம்பத்தூர் அருகே திருமண வீட்டில் விஷச் சாராயம் அருந்திய 6 பேர் இறந்தனர்.
திருமணத்திற்குப் பிறகு, மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த சிலர் கும்மிடிப்பூண்டியிலிருந்து சாராயம் வாங்கி வந்தனர்.நள்ளிரவுக்குப் பிறகு மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்கள் கும்பலாக அமர்ந்து சாராயம் குடிக்கத் தொடங்கினர்.
குடிக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் அவர்கள் வாந்தி எடுத்துள்ளனர். பின்னர் மயங்கி விழுந்து விட்டனர். இதில்ரவி என்பவர் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
மாசிலாமணி, இன்னொரு மாசிலாமணி மற்றும் டில்லி உள்பட 10 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்தனர். மேலும் 5 பேர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த கும்மிடிப்பூண்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்தப் பகுதிகளில் அதிக அளவில் கள்ளச்சாராயம் புழங்குவது குறிப்பிடத்தக்கது. இதைத் தடுக்க போலீஸார் சமீபகாலமாக தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். கடந்த வாரம் நடந்த சாராய வேட்டையில்கூட, 300-க்கும்மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும் தொடர்ந்து கள்ளச்சாராயம் தாராளமாக புழங்கி வந்தது. தற்போது அது 6 பேரின் உயிரைப் பறித்துவிட்டது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications