For Daily Alerts
Just In
பறவை மோதி மும்பை-மதுரை விமானத்தின் இறக்கை சேதம்
சென்னை:
மும்பை-மதுரை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், சென்னையில் தரையிறங்கும்போது, பறவை ஒன்று மோதியதால்விமானத்தின் இடது இறக்கை சேதமடைந்தது.
ஆனாலும் பறவை இறக்கையில் மோதியதையும், அதனால் விமானத்தின் இறக்கை சேதமடைந்ததையும்,அதிகாரிகள் விமானம் தரையிறங்கிய பின்பே கண்டுபிடித்தனர்.
இந்த விமானத்தில் 101 பயணிகள் இருந்தனர். பயணிகள் அனைவரும் நண்பகல் 12.15 மணிக்கு வேறு விமானம்மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பறவை தாக்கிய விமானத்தை அதிகாரிகள் சோதித்து, சரி செய்தனர். அதன் பின்பு அந்த விமானம் டெல்லிக்குப்புறப்பட்டுச் சென்றது.
Comments
Story first published: Saturday, September 8, 2001, 5:30 [IST]