கள்ள ஓட்டை தடுப்பது கடினம் தான்- தேர்தல் கமிஷனர்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கள்ள ஓட்டுப் போடுவதைத் தடுப்பது கடினமான காரியம் தான் என்று தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் பி.எஸ்.பாண்டியன் கூறினார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கானஏற்பாடுகளைக் கவனித்து வருகிறோம்.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலே உள்ளாட்சித் தேர்தலுக்கும்பயன்படுத்தப்படும். வாக்காளர் பட்டியலில் இருக்கும் குளறுபடிகள் எல்லாம் வரும் 20ம் தேதிக்குள்சரிசெய்யப்பட்டு விடும்.
இந்தத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தைப் பயன்படுத்த முடியாது. இதனால் கள்ள ஓட்டுப் போடும்வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது.
என்ன செய்வது? 50 ஆண்டுகளாக கள்ள ஓட்டுப் பழக்கம் இருந்து வருகிறது. இதைத் தடுப்பது கடினமான காரியம்தான் என்று தேர்தல் கமிஷனர் கூறினார்.












Click it and Unblock the Notifications