காஷ்மீர்-ஸ்கூல் பஸ்மீது குண்டு தாக்குதல்: மாணவன் பலி

Subscribe to Oneindia Tamil

காஷ்மீர்:

பள்ளி மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த பஸ்சின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில்ஒரு மாணவர் கொல்லப்பட்டார். 13 பேர் காயமடைந்தனர்.

தெற்கு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா மையத்திற்கு, தனியார் பள்ளியைச் சேர்ந்தமாணவர்கள் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் இந்தக் கோர சம்பவம் நடந்தது.

இந்த பஸ் ஸ்ரீநகர்-பகல்காம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, தீவிரவாதிகள் ரிமோட் கண்ட்ரோல்மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர்.

இந்த விபத்தில் 18 வயது பள்ளி மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 13 மாணவர்கள் காயமடைந்தனர்.இந்த விபத்து சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடந்தது.

காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேரின்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த இட்ததை சுற்றி வளைத்தனர். தாக்குதல் நடத்தியதீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.

இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+