உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் போட்டி - இளங்கோவன்
சென்னை:
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகஅக்கட்சியின் மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகக் குறைந்த இடங்களிலேயே போட்டியிட்டது. ஆனால் இப்போதுநிலைமை மாறி விட்டது.
அதிமுகவுடன் சுமுகமான உறவையே காங்கிரஸ் கொண்டுள்ளது. இருப்பினும், உள்ளாட்சித் தேர்தலில் அதிகஇடங்களில் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. காங்கிரஸ் அறக்கட்டளைவிவகாரத்தில் கட்சித் தலைவர் சோனியா எடுத்த முடிவில் தவறில்லை.
இந்தப் பிரச்சினையில் வேறு கட்சியினர் தலையிட்டு விடக் கூடாது என்பதற்காகவே, இந்த வழக்கு தொடர்பானஎந்த நடவடிக்கையிலும் என்னை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்துள்ளேன் என்றார் இளங்கோவன்.