For Daily Alerts
Just In
ரோட்டில் சென்றவரை அடித்துக் கொன்ற மன நோயாளி
சென்னை:
சென்னையில் சாலையில் நடந்து சென்றவரை மனநிலை பாதிக்கப்பட்டவர் அடித்துக் கொலை செய்தார்.
அந்த இளைஞர், திடீரென தனக்கு முன்னால் சென்ற நபரின் தலையில் கையில் வைத்திருந்த தடியால் ஓங்கிஅடித்தார். தொடர்ந்து பலமுறை அவர் அடித்ததால், அந்த நபர் தலையில் பலத்த அடிபட்டு, அங்கேயே இறந்துவிட்டார்.
போக்குவரத்து, ஆட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் திடீரென நடந்து விட்ட அந்தச் சம்பவத்தால்,அப்பகுதியில் சென்று கொண்டிருந்தவர்கள் ஸ்தம்பித்துப் போய் விட்டனர். பின்னர் சுதாரித்துக் கொண்டு தடியால்அடித்தவரைப் பிடித்து சைதாப்பேட்டை போலீஸில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையின்போது, அந்த நபர் சுப்ரமணி என்பது தெரிய வந்தது. ஆனால் அவர் ஒழுங்காகபேசவில்லை. திடீரென சிரிக்கிறார். எனவே அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று போலீஸார்சந்தேகிக்கிறார்கள்.
Comments
Story first published: Monday, September 10, 2001, 5:30 [IST]