For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தற்கொலை செய்த அதிமுக தொண்டரின் மனைவிக்கு அரசு வேலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட அதிமுக தொண்டர் பாண்டியனுடைய மனைவிக்கு அரசு வேலையும், ரூ.1லட்சம் இழப்பீடும் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த பாண்டியன், தான் கேட்டிருந்த வீட்டு வசதி கடன் கிடைக்காமல் போனதால், சென்னைக்குவந்து ஜெயலலிதாவைப் பார்த்து, மனு கொடுக்க முயற்சித்துள்ளார்.

ஆனால், காவலர்கள் தடுத்து விட்டதால், போயஸ் தோட்டத்திற்கு முன்பாக, தன் உடலில் மண்ணெண்ணையைஊற்றித் தீவைத்துக் கொண்டார் பாண்டியன்.

ராணிப்பேட்டை மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல்திங்கள்கிழமை பாண்டியன் இறந்துவிட்டார்.

இதையறிந்த முதல்வர், பாண்டியனின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் இழப்பீடும், மதுரை பெரிய ஆலங்குளத்தில்தொகுப்பு வீடும், அவருடைய மனைவிக்கு சமூக நலத் துறையில் தகுதிக்கேற்ற வேலையையும் வழங்கஉத்தரவிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X