எரிசக்திக் கொள்கையைப் பின்பற்றவில்லை - தமிழகம் மீது மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

மரபு சாரா எரிசக்தித் துறைக் கொள்கைகளை தமிழக அரசு முறையாக பின்பற்ற வில்லை என்று மத்திய மரபு சாராஎரிசக்தித் துறை அமைச்சர் கண்ணப்பன் கூறியுள்ளார்.

பாண்டிச் சேரியில் ஆரோவில் என்ற இடத்தில் "சோலார் பவுல் பிராஜக்ட்" என்ற புதிய திட்டத்தைத் தொடங்கிவைக்க அமைச்சர் பாண்டிச்சேரி வந்தார். அப்போது அவர் பேசியதாவது:

வரும் 2012ம் ஆண்டு மரபு சாரா எரிசக்தியின் மூலம், நாடு முழுவதும் 18,000 கிராமங்களுக்கு மின்சார வசதிஏற்படுத்தித் தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மரபுசாரா எரிசக்திக் கொள்கையை, காலமாறுபாட்டிற்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தமிழகம் மறுஆய்வு மற்றும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆனால் தமிழக அரசு அந்த விதிமுறைகளைக் கடைபிடிக்கத்தவறியுள்ளது.

கடந்த 1996ம் ஆண்டில் இந்தக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழக அரசு இதை மறு ஆய்வு செய்யமுன்வரவில்லை.

நாகர்கோவில் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம் பெறப்படும் சக்தியின் அளவைஇன்னும் அதிகப்படுத்த தமிழக அரசு திட்டமிட வேண்டும். இதுகுறித்து நான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குகடிதம் எழுதி இருக்கிறேன். மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், அவர் முதல்வராக இருந்தபோது கடிதம்எழுதினேன்.

ஜெயலலிதா விரும்பினால், இதுகுறித்து அவரிடம் நேரில் பேசவும் நான் தயாராக இருக்கிறேன் என்றுகண்ணப்பன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+