சென்னையில் கன மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரில் திங்கள்கிழமை நள்ளிரவுக்கு மேல் கன மழை பெய்யத் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலைவரையிலும் மழை தொடர்ந்தது.

சென்னை நகரில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்தது. பகல் நேரங்களில் சாலைகளில் நடக்கவேமுடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மாலையில் கருமேகங்களால் வானம் சூழப்பட்டது. கன மழை பெய்யும் எனபொதுமக்கள் நினைத்திருந்த நிலையில் மழை பெய்யவில்லை.

ஆனால், திங்கள்கிழமை இரவு 2 மணிக்கு மேல் கன மழை பெய்யத் தொடங்கியது. பயங்கரமாக பெய்த இந்தமழை, காலை 7 மணி வரை நீடித்தது.

அதன் பிறகும் லேசான மழை தொடர்நது பெய்து வருகிறது. கன மழை காரணமாக சென்னை நகரின் பலபகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் இருசக்கர வாகனங்களை சரியாக ஓட்ட முடியாத நிலை பலபகுதிகளில் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் புதன்கிழமையும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+