சிவகங்கை அருகே ஓடும் பஸ்சில் நகை, பணம் கொள்ளை
சிவகங்கை:
சிவகங்கை அருகே ஓடும் பஸ்சில் கொள்ளை கும்பல் ஒன்று பயணிகளிடமிருந்து 14 பவுன் நகை மற்றும் ரூ 50,000பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றது. பஸ்சின் ஓட்டுனர் உள்ளிட்ட இருவர் அரிவாளால்வெட்டப்பட்டனர்.
பஸ் மானாமதுரை பஸ் ஸ்டாண்டை நெருங்கி போது 3 பேர் பஸ்சை நிறுத்தினர். அவர்கள் ஒக்கூர் செல்ல வேண்டும்என்று கூறி பஸ்சில் ஏறிக் கொண்டனர்
காந்தி சிலை அருகே பஸ் வந்த போது 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று பஸ்சை நிறுத்தி, ஒக்கூர் செல்ல வேண்டும்என்று கூறி பஸ்சில் ஏறினர். இவர்களை ஏற்றிக் கொண்டு பஸ் சீரான வேகத்தில் தஞ்சாவூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது,
திருப்பத்தூர் ஒக்கூர் அருகே உள்ள அண்னாநகர் வழியே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது நள்ளிரவுநேரம். ஒக்கூர் செல்ல வேண்டும் என்று ஏறிய இரண்டு கும்பலைச் சேர்ந்தவர்களும் அரிவாளை எடுத்தனர்.
பஸ்சின் டிரைவர் சேனைத்தேவன் (வயது 43) முதுகில் கும்பலைச் சேர்ந்த ஒருவர் அரிவாளால் வெட்டினார்.மற்றவர்கள் கண்டக்சடரின் கழுத்தில் அரிவாளை வைத்து பயணிகளிடமிருந்து நகை மற்றும் பணத்தைகொள்ளையடித்தனர்.
குன்னூர்ை சேர்ந்த தெய்வதனி என்பவரிடமிருந்து 3 பவுன் நகையையும், கமுதியைச் சேர்ந்த உத்ராஎன்பவரிடமிருந்து 3 பவுன் நகையையும், பரமக்குடியைச் சேர்ந்த பிரேமா என்பவரிடமிருந்து 3 பவுன்நகையையும், கும்பகோணத்தைச் சேர்ந்த ஜோதி என்பவரிடமிருந்து 3 பவுன் நகையையும், நாகப்பட்டினத்தைச்சேர்ந்த கண்ணன் என்பவரிடமிருந்து 2 பவுன் நகையையும் கொள்ளையர்கள் பறித்துக் கொண்டனர். இவை தவிர,ரூ.50,000 பணத்தையும் கொள்ளையடித்தனர்.
கொள்ளையர்களை பிடிக்க முயன்ற பயணி ராமன் என்பவர் முயற்சித்தார். அவரை கொள்ளையர்கள் அரிவாளால்வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். காயமடைந்த டிரைவரும், பயணியும் சிகிச்சைக்காக மருத்தவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
14 பவுன் நகையுடனும், ரூ.50,000 பணத்துடன் தப்பி ஓடிய கொள்ளையர்களை பிடிப்பதற்காக சிவகங்கைடி.எஸ்.பி. தலைமையில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொள்ளையர்களை பிடிக்கும்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications