மத்திய அரசு மீது அதிருப்தியா? தாக்கரே மறுப்பு
மும்பை:
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் எனக்கு அதிருப்தி ஏற்படவில்லை என்றுசிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறினார்.
சமீபத்தில் தே.ஜ.கூட்டணி அரசு தனது மந்திரிசபையை விரிவாக்கம் செய்தது. நாங்கள் எங்கள் கட்சிபிரதிநிதிகளுக்கு ஒரு மதிப்பு மிகுந்த துறை ஒதுக்க வேண்டும் என்று முன்பே கேட்டிருந்தோம். இந்த மந்திரிசபைவிரிவாக்கத்தின் போது எங்களின் தேவை நிறைவேற்றப்படவில்லை.
இவ்வாறு எங்கள் கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தாலும், இதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. இதனால்நான் அதிருப்தி அடைந்துள்ளதாக சில பத்திரிக்கைகள் தான் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளன.
தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு மற்ற கட்சிகள் மூலம் எதுவும் பங்கம் வருமானால், கூட்டணியைக் காப்பாற்றநாங்கள் தற்போது வகித்துவரும் பதவியையும் விட்டுத் தர தயாராக இருக்கிறோம்.
எங்களுக்குத் தேசியமும், ஹிந்துத்வாவும் தான் முக்கியமான கொள்கைகள். பதவி எங்களுக்கு ஒரு பொருட்டல்ல.இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications