அண்ணன் கோடு போட்டுட்டான்.. நான் ரோடு போடுறேன் பாருங்க.. மிரட்டலாக அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி தம்பி
மும்பை: இந்திய கிரிக்கெட் உலகில் தற்போது மிக வேகமாக வளர்ந்து வருபவர் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி, 776 ரன்களுடன் 'ஆரஞ்சு கேப்' வென்று ஒட்டுமொத்த உலகத்தையும் தன் பக்கம் திருப்பி பார்க்க வைத்தவர். இந்த நிலையில், வைபவ் சூரியவன்ஷியின் குடும்பத்தில் இருந்து மற்றொரு சிறுவன் கிரிக்கெட் உலகிற்கு தனது வருகையை பதிவு செய்துள்ளார்.
வைபவ் சூரியவன்ஷியின் 10 வயதே ஆன தம்பி ஆசீர்வாத் சூர்யவன்ஷி, பீகாரில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் அதிரடியாக விளையாடி தனது முதல் சதத்தை விளாசி அசத்தியுள்ளார். பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள தாஜ்பூர் கிரிக்கெட் அகாடமி அணிக்காக ஆசீர்வாத் விளையாடி வருகிறார்.

உள்ளூர் பயிற்சிப் போட்டி ஒன்றில் களமிறங்கிய 10 வயது ஆசீர்வாத் சூர்யவன்ஷி, எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 87 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், 103 ரன்கள் குவித்து அசுர சாதனை படைத்தார். இவரது இந்த மிரட்டலான இன்னிங்ஸில் 20 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும். 118.39 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய இவரின் ஆட்டம் பலரையும் வியக்க வைத்துள்ளது.
அச்சு அசலாக அவரது அண்ணன் வைபவின் ஆட்டத்தை நினைவுபடுத்துவதாக மைதானத்தில் இருந்தவர்கள் வியந்தனர். ஆசீர்வாத்தின் இந்த அதிரடி சதத்தின் உதவியோடு, தாஜ்பூர் கிரிக்கெட் அகாடமி அணி 29.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
தற்போது இந்தியா 'ஏ' அணிக்காக முத்தரப்புத் தொடரில் விளையாட இலங்கைக்குச் சென்றுள்ள அண்ணன் வைபவ் சூரியவன்ஷி, தனது தம்பியின் இந்தச் சாதனையை சமூக வலைதளங்களில் கொண்டாடியுள்ளார். ஆசீர்வாத் சதம் அடித்த ஸ்கோர்கார்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "வாழ்த்துகள் ஆசீர்வாத்" என இரண்டு சிவப்பு இதய எமோஜிகளுடன் தனது மகிழ்ச்சியையும், பெருமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆசீர்வாத்தின் இந்த முதல் சதம் குறித்து அவர்களது தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி, "எனது இளைய மகன் ஆசீர்வாத் தனது முதல் சதத்தை அடித்துள்ளார், வைபவை போலவே இவருக்கும் உங்களது அன்பும் ஆசியும் வேண்டும்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ஒரே குடும்பத்தில் இருந்து அடுத்தடுத்து இரு திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் உருவாவது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications