“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர்
சென்னை: "எதன் மூலம் தவெக வென்றதோ, அதையே பயன்படுத்தி நாமும் வெல்வோம். இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவுக்கு முந்தைய கடைசி 3 நாட்களில்தான் வெற்றியை பறிகொடுத்து விட்டோம் என அவர் பேசியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பலத்த அடியை கொடுத்துள்ளது. தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இதில் 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரண்டு, தமிழக வெற்றி கழக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வாக்களித்தனர்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிக்க முடியாத காரணத்தால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கட்சிக்குள்ளேயே கடுமையான அதிருப்திகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக அதிமுகவில் இருந்து விலகி பலரும் ஆளும்கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையில் இறங்கியுள்ளார். தேர்தல் தோல்வி தொடர்பாகக மாவட்ட வரியாக இந்த ஆலோசனை நடக்கவுள்ளது. முதற்கட்டமாக அதிமுக தலைமை அலுவலத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "அதிமுக கட்சியை வலுப்படுத்த ஆரோக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கட்சி நிர்வாகிகள் ஆலோசனைகளை கேட்டு கட்சி தலைமை செயல்படும். வரும் நாட்களில் படிப்படியாக மற்ற மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க கட்சி தலைமை உறுதிபூண்டுள்ளது.
தற்போது அதிமுகவில் உள்ள நிர்வாகிகள் யாரும் மனம் தளர வேண்டாம், அதிமுகவுக்கு தேர்தல் தோல்வி என்பது புதிது அல்ல. தோல்வி வந்தபோதெல்லாம் பல்வேறு எதிர்ப்புகளை கட்சி சந்தித்து, அதில் வெற்றி பெற்றுள்ளது. அதுபோல, தற்போதுள்ள பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டு, அதிமுக கட்சி மீண்டும் பலமான கட்சியாக, தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் சக்தியாக மாறும். அதற்கு அனைவரும் இணைந்து ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.
சமூக வலைதளங்களை சரியாக கையாளாததே நமது தோல்விக்கு காரணம். சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு கடைசி 3 நாட்களில் தான் நாம் வெற்றியை இழந்துள்ளோம். எதன் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெல்ல வேண்டும். சமூக வலைதள செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தவெகவின் வெற்றி நிலையானது அல்ல. அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் நாம்தான் வெற்றி பெறுவோம். தவெக நமக்கு எதிரி அல்ல திமுகதான் நமக்கு உண்மையான எதிரி." எனப் பேசியுள்ளார்.
-
“சாக்கு போக்கு சொல்லக்கூடாது”.. விஜய் பிறந்தநாளையொட்டி தவெக தொண்டர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அட்வைஸ்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
அரசு மருத்துவமனைகளில் புரட்சி.. இனி மொபைல் ஆப் மூலம் டோக்கன் முன்பதிவு.. விஜய் அரசின் புதிய முடிவு! -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications