அமெரிக்காவிடம் சிக்குகிறது பாகிஸ்தான்
வாஷிங்டன்:
விமானக் கடத்தல் மற்றும் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானை அமெரிக்கா சந்தேகக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஆதரிக்கும் மிக முக்கிய நாடு பாகிஸ்தான் தான். ஒசாமா பின் லேடன் பலமுறைபாகிஸ்தானுக்கு பயணம் செய்துள்ளார். பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கும் ஒசாமாவுக்கும் தலிபான்ஆட்சியாளர்களுக்கும் இடையே நல்ல உறவு நிலவி வருகிறது.
எனவே, இந்தத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு முன்பே தெரியாமல் இருந்திருக்க முடியாது எனஅமெரிக்கா நம்புகிறது.
இந்தத் தாக்குதலில் தொடர்புடையவர்களைக் கண்டுபிடிக்க பாகிஸ்தான் எங்களுக்கு உதவ வேண்டும் என்ற அன்பானஅமெரிக்க வேண்டுகோள் பாகிஸ்தானை அச்சத்தில் தள்ளியுள்ளது.
பாகிஸ்தானுக்குத் தெரியாமல் இத் தாக்குதல் நடந்திருக்க முடியாது என்பதைத் தான் மறைமுகமாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதையடுத்து வியாழக்கிழமை உயர் ராணுவ அதிகாரிகளுடன் தனது இல்லத்தில் அவசரக் கூட்டத்தை நடத்தினார் அந் நாட்டுராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப். கூட்டத்துக்குப் பின் அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தீவிரவாதத்தை பாகிஸ்தான் அடியோடு வெறுக்கிறது. தீவிரவாதத்தை முறியடிக்க பாகிஸ்தான் உறுதி பூண்டுள்ளது எனக்கூறியுள்ளார்.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இரு நாடுகளும் தான் உரம் போட்டு இஸ்லாமிய தீவிரவாத்தைத் வளர்த்து வருகின்றன என்பதுஉலகறிந்த உண்மை. அமெரிக்காவின் கோபத்தில் இருந்து தப்புவதற்காக தீவிரவாதத்தை வெறுப்பதாக பர்வேஸ் முஷாரப் அவசரஅறிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவிடம் வசமாக சிக்குகிறது பாகிஸ்தான்.