தர்மபுரி அருகே மின்சாரம் தாக்கி 2 நண்பர்கள் பலி: ஒருவர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

தர்மபுரி அருகே நண்பர்கள் 2 பேர் மின்சாரம் தாக்கி இறந்தனர். அவர்களது நண்பர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார் என்று போலீசார் கூறினர்.

இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:

கடந்த 9ம் தேதி தர்மபுரி அருகே வசித்து வந்தகநண்பர்கள் 3 பேர் வேட்டைக்காகச் சென்றனர். அவர்கள்வேட்டைக்குச் சென்று விட்டு திரும்பும் வழயில் 2 பேர் வயலில் போட்டப்பட்டிருந்த மின்சார வேலியைதொட்டதால் மின்சாரம் தாக்கி இறந்து போனார்கள்.

உயிருடன் இருந்த ஒருவர் ஊருக்கு திரும்பி வந்தார். அவருடன் வேட்டைக்குச் சென்ற மற்ற இருவரும் என்னஆனார்கள் என்று அவர்களது உறவினர்கள் கேட்ட போது, அவர்கள் இருவரும் இறந்து போய்விட்டதாகவும்,வயலின் சொந்தகாரரின் உதவியுடன் அவர்களை வயலிலேயே புதைத்துவிட்டதாகவும் கூறினார்.

இதை இறந்தவர்களின் உறவினரும், பொதுமக்களும் நம்பவில்லை இவர்தான் அந்த 2 பேரையும் கொலைசெய்திருப்பார் என்று இவர் மீது சந்தேகப்பட்டனர்.

தன்னை அனைவரும் சந்தேகிப்பதால் மனமுடைந்த இவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட இவரது உடலும், மின்சாரம் தாக்கி இறந்த 2 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக புதன்கிழமை இரவு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+