இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு
கொழும்பு:
இலங்கையில் சந்திரிகா தலைமையில் 20 துணை அமைச்சர்களையும், 19 கேபினட் அமைச்சர்களையும் கொண்டபுதிய அமைச்சரவை இன்று (வெள்ளிகிழமை) பதவியேற்றது.
ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் சந்திரிகா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் சந்திரிகா அரசுபெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் சந்திரிகா அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்கொண்டு வந்தன.
தன் அரசைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாடாளுமன்றத்தை 2 மாத காலத்திற்கு ஓத்தி வைத்தார் சந்திரிகா. இதுநடந்தது கடந்த ஜுலை மாதம்.
இந்நிலையில் ஜனதா விமுக்தி பெரமுணாவுடன் (ஜே.வி.பி.) சந்திரிகாக ஒப்பந்தம் செய்து கொண்டார். அவர்கள்விதித்த பல நிபந்தனைகளையும் அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து சந்திரிகா அரசுக்கு 1 வருடம் காலம்ஆதரவளிப்பதாக ஜே.வி.பி. அறிவித்தது.
ஜே.வி.பி. வசம் 10 எம்.பிக்கள் உள்ளனர். இவர்கள் ஆதரவால் சந்கதிரிகா அரசு மீண்டும் பெரும்பான்மைபெற்றுள்ளது. இதனால் சந்திரிகா அரசு பிழைத்தது.
ஜே.வி.பி. விடுத்த நிபந்தனையில் ஒன்று கேபினட் அமைச்சர்களின் எண்ணிக்கையை 40லிருந்து 20ஆக குறைக்கவேண்டும். இதை சந்திரிகா ஏற்றுக் கொண்டார்.
இதனடிப்படையில் புதிய கேபினட் அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை பதவியேற்றனர். 19 கேபினட் அமைச்சர்களும்,அவர்களுக்கு உதவும் வகையில் 20 துணை அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சந்திரிகா முன்பு தன் வசம் இருந்த நிதித்துறை மற்றும் பாதுகாப்புத்துறையை யாருக்கும் மாற்றாமல் தன் வசமேவைத்துக் கொண்டுள்ளார்.
ரத்னஸ்ரீ விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். சந்திரிகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவியாழக்கிழமை மந்திரி சபையிலிருந்து விலகிய 4 அமைச்சர்களைத் தவிர மற்ற மூத்த அமைச்சர்கள்அனைவருக்கும் மீண்டும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
பதவி இழந்த அமைச்சர்களில் ஆறுமுகம் தொண்டமான் குறிப்பிடத்தக்கவர். மக்கள் கூட்டணியைச் சேர்ந்தமுக்கியமானவர்களுக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்களுக்கு, அதிபர் மாளிகையில் வெள்ளிக்கிழமை காலை பதவி பிரமாணம் செய்து வைத்தார்சந்திரிகா.












Click it and Unblock the Notifications