எப்போது அலுவலகம் வருவார் கோவிந்தவாசன்?
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் கோவிந்தவாசன் கட்சி அலுவலகத்திற்கு விரைவில் வரவுள்ளார்என்று கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூப்பனார் மறைந்து 16 நாட்கள் ஆகி விட்ட நிலையில், விரைவில் கோவிந்தவாசன் கட்சிஅலுவலகத்திற்கு வருவார் என்று கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சிப் பணிகள் ஏராளமாக காத்துக்கிடப்பதை கோவிந்தவாசன் அறிவார் என்றும் முதல் கட்டமாக அறக்கட்டளை விவகாரம் குறித்து அவர் முடிவுசெய்வார் என்றும் கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.
அதுதவிர நிர்வாகிகள் நியமனம், உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பான பணிகள் உள்ளிட்ட பல்வேறுமுக்கியப் பிரச்சினைகள் கோவிந்தவாசன் முன் உள்ளது. இதை சரி செய்வதே கோவிந்தவாசனின் முக்கியப்பணிகளாக இப்போதைக்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, வியாழக்கிழமை தமாகாவினர் பலர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இருந்து பரிவட்டம்கொண்டு வந்து அதை கோவிந்தவாசனுக்குக் கட்டினர்.
இதுதவிர, கோவை நகர தமாகா மேயர் கோபாலகிருஷ்ணன், முக்தா சீனிவாசன், இப்ராகிம் ராவுத்தர், ராமசாமிஉடையார், ஞானதேசிகன் எம்.பி. உள்ளிட்ட பலர் கோவிந்தவாசனுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.