இந்திய-பாக். எல்லையில் தீவிரவாதிகள் முகாம்கள் மூடல்
ஜம்மூ:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் 12 முகாம்கள் அவசர அவசரமாகமூடப்பட்டுள்ளன.
இத்தகவலை இந்திய உளவுத்துறை வெளியிட்டுள்ளது.
காஷ்மீரில் இயங்கி வரும் தீவிரவாதிகளுக்கு இங்கு தான் பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது. இங்கு தங்கவைக்கப்பட்டிருந்த பயிற்சித் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் ஆப்தகானிஸ்தானுக்கு அழைத்துச் சென்றுவிட்டது.
ஹிஸ்ப்-உல்-முஜாகிதான், ஹர்கத்-உல்-முஜாகிதீன், ஹர்கத்-உல்-ஜிகாதி இஸ்லாமி, தெஹ்ரீக்-ஏ-ஜிகாதிஇஸ்லாமி, முஸ்லீம்முஜாகிதீன், ஜெய்ஸ்-ஏ-முகம்மத் ஆகிய அமைப்புகளின் 12க்கும் மேற்பட்ட முகாம்கள் அவசர அவசரமாக மூடப்பட்டுள்ளன.
இந்த முகாம்கள் தற்காலிகமாகத் தான் மூடப்பட்டுள்ளதாகவும் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் உளவுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான லக்ஷர்-ஏ-தொய்பா தன்னிடம் உள்ள தீவரவாதிகளில் 500 பேரை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளது.அமெரிக்கத் தாக்குதலை எதிர்கொள்ள தலிபான்களுக்கு உதவ இவர்கள் அங்கு சென்றுள்ளனர். இவர்கள் ஜலாலாபாத் நகரில் முகாமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications