For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்ணாவுக்கு ஜெ., கருணாநிதி அஞ்சலி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க நிறுவனருமான பேரறிஞர் அண்ணாதுரையின்93-வது பிறந்த நாள் தமிழகத்தில் சனிக்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலைஅணிவித்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பிக்கள்,எம்.எல்.ஏக்கள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பின்னர் அதே பகுதியில் அமைக்கப்பட்ட மேடையில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தபிளஸ்1, பிளஸ்2 பயிலும் ஏழை மாணவிகள் 25 பேருக்கு இலவச சைக்கிளை முதல்வர்வழங்கினார். இந்தத் திட்டம் இன்று முதல் தமிழகம் முழுவதிலும்அமல்படுத்தப்படுகிறது.

மொத்தம் 60,000 மாணவியருக்கு இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக சைக்கிள்வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு மாநில ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.

கருணாநிதி அஞ்சலி:

வள்ளுவர் கோட்டம் வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு முன்னாள்முதல்வர் கருணாநிதி மாலை அணிவித்தார். முன்னாள் அமைச்சர்கள் அன்பழகன்,துரைமுருகன், கோ.சி.மணி, சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் சிலைக்குமாலை அணிவித்தனர்.

எம்.ஜி.ஆர். கழகத்தின் சார்பில் அதன் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், பொதுச்செயலாளர் ஜெகத்ரட்சகன், திராவிடர் கழகம் சார்பில் சாமித்துரை,எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க சார்பில் திருநாவுக்கரசு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க சார்பில் எஸ்.டி.சோமசுந்தரம் உள்ளிட்டோர் அண்ணா சிலைக்கு மாலைஅணிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X