For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டான்சி: ஜெ.யின் அப்பீலை விசாரிக்க புதிய நீதிபதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

டான்சி மற்றும் கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே வழக்குகளில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டுமனுக்களை விசாரிக்க நீதிபதி என். தினகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உரிய ஆவணங்களைத் தனக்கு சமர்ப்பிக்காத காரணத்தாலும், ஜெயலலிதாவே தற்போது முதல்வராக இருப்பதால்நீதி கிடைக்காது என்ற காரணத்திற்காகவும், இவ்வழக்குகளை வேறு உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றுஇந்த வழக்குகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்கறிஞர் வெங்கடபதி உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்திருந்தார்.

இதன் எதிரொலியாக, இந்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்து வரும் நீதிபதி மாற்றப்பட வேண்டும் என்றுநீதிபதி பரூச்சா தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் கடந்த 7ம் தேதி தீர்ப்பளித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியே இவ்வழக்கிற்கான புதிய நீதிபதியை நியமிப்பார் என்றும் உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டது.

அந்த வகையில், ஏற்கனவே இந்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்து வரும் நீதிபதிபாலசுப்பிரமணியத்திற்குப் பதிலாக, நீதிபதி தினகர் விசாரிப்பார் என்று சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமைநீதிபதி சுபாஷண் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

மேல் முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணையை அக்டோபர் 1ம் தேதிக்கு முன் நடத்தக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இதனால், அக்டோபர் 1ம் தேதிக்குப் பிறகு, நீதிபதி தினகர் இந்த வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பார்.

டான்சி வழக்கில் தனி நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறை தண்டனை காரணமாகத்தான் ஜெயலலிதாவால்,கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது என்பதும், அவர் தற்போது வகித்து வரும் முதல்வர்பதவியை விரைவில் ராஜினாமா செய்யப் போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X