For Daily Alerts
Just In
கும்பகோணம் அருகே சாலை விபத்தில் 3 பேர் சாவு
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே காரும் லாரியும் புதன்கிழமை காலை நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
கும்பகோணம்-அம்மாசத்திரம் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஒரு காரும் லாரி ஒன்றும் நேருக்கு நேர்மோதிக் கொண்டன.
இவ்விபத்தில், கார் முற்றிலுமாக நொறுங்கியது. காரில் பயணம் செய்தவர்கள் அனைவரும் படுகாயங்களுடன்தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில், 3 பேர் மருத்துவமனையில் இறந்தனர். மேலும் 2 பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
விபத்து குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments
Story first published: Wednesday, September 26, 2001, 5:30 [IST]