பீதி குறையாத சென்னை மக்கள்
சென்னை:
செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட லேசான நில அதிர்ச்சி சென்னை மக்களின் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
இரவு 8.30 மணிக்கு ஆரம்பித்து 7 நிமிடங்களில் 2 முறை ஏற்பட்ட இந்த லேசான நில அதிர்ச்சியால் நகர்முழுவதிலும் மக்கள் நில அதிர்வை உணர்ந்துள்ளனர்.
பல இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 2 பேர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளனர்.
பெரும் பாதிப்பை இந்த நில அதிர்ச்சி ஏற்படுத்தவில்லை என்ற போதிலும், பெரும் பூகம்பமாக இது மாறலாம் என்றஎண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தி விட்டது. புதன்கிழமை காலையிலிருந்து எங்கு பார்த்தாலும் மக்கள் நிலஅதிர்ச்சியைப் பற்றியே பேசிக் கொண்டுள்ளனர்.
பூகம்பம் வந்தால் எப்படித் தப்பிப்பது, பூகம்பம் எப்படி வருகிறது, இதனால் ஏற்படும் விளைவுகள் வரையிலும்மக்கள் அலசிக் கொண்டிருக்கிறார்கள்.
பாண்டிச்சேரிக்கு அருகே கடலில்தான் பூகம்பத்தின் மையம் இருந்தது என்று நிபுணர்கள் கூறியுள்ள போதிலும்,ஆப்கானிஸ்தான் நாட்டின் மீது அமெரிக்கா அணுகுண்டு போன்ற பலமுள்ள குண்டை வீசியதால் ஏற்பட்டபாதிப்புதான் இது என்றும் ஒரு சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுதவிர சென்னை நகரில் நிலத்தடி நீரின் இருப்பு குறைந்து, சென்னைக்குக் கீழே வெறும் பாறைதான்இருப்பதாகவும், அதனால்தான் இங்கு நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் சிலர் தீவிரமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நிலத்தடி நீர் குறைவுக்கும், நில அதிர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று பூகம்பவியல் ஆய்வு மைய துணைஇயக்குநர் பட்நாகர் தெளிவுபடுத்தியுள்ளார்.
நில அதிர்ச்சி வந்தாலும் வந்தது, அத்தியாவசியப் பிரச்சினையான தண்ணீர்ப் பிரச்சினையை சென்னை மக்கள்இப்போதைக்கு மறந்து விட்டனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications