ஆப்கானிஸ்தானில் நுழைந்தது அமெரிக்க - ரஷ்ய கூட்டுப் படை
டெல்லி:
அமெரிக்க-ரஷ்ய கூட்டு அதிரடிப் படையினர் ஆப்கானிஸ்தானில் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர் என பாகிஸ்தானின் த நியூஸ்இன்டர்நேசனல் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் டெல்டா படையினரும், சீல் கமாண்டோக்களும், தஜிக்கிஸ்தானில் நிலை கொண்டுள்ள ரஷ்யாவின் 201 வதுரைபிள் டிவிஷன் படையினரும் இத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
தஜிக்கிஸ்தானில் இருந்து புறப்பட்ட அமெரிக்க-ரஷ்ய கமாண்டோ படையினர் நேற்று (வியாழக்கிழமை) முதல்ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து தாக்க ஆரம்பித்துவிட்டனர். பாமீர் மலைப் பகுதியில் தான் ஒரு காலத்தில் ரஷ்யா தனது அணுஆயுதங்கள் பொறுத்தப்பட்ட ஏவுகணைகளை குவித்து வைத்திருந்தது.
இந்த மலைப் பகுதி குறித்த விவரமான வரைபடங்கள் ரஷ்யாவிடம் உள்ளன. இதையடுத்து ரஷ்ய உதவியுடன் அமெரிக்ககமாண்டோக்கள் இந்தப் பகுதியில் நுழைந்துள்ளனர்.
முன்னதாக கடந்த மாதம் 23ம் தேதி ரஷ்ய அதிபர் புடினும் அமெரிக்க அதிபர் புஷ்சும் சந்தித்துப் பேசியபோது இந்த கூட்டுத்தாக்குதல் குறித்து முடிவானது. இதையடுத்து தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் நவீன ஆயுதங்களை ரஷ்ய ராணுவத்துக்குஅமெரிக்கா அளித்தது.
இந்த ஆயுதங்களுடன் ஒரு வாரம் பயிற்சியில் ஈடுபட்ட ரஷ்யப் படையினர் இப்போது அமெரிக்கர்களுடன் இணைந்துதாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இத் தாக்குதலில் இறங்கியுள்ள ரஷ்யப் படை வீரர்களில் பெரும்பாலானவர்கள் புஷ்டூன் இனத்தைச் சேர்ந்தவர்கள்.ஆப்கானிஸ்தானின் பெரும்பான்மை மக்கள் இந்த இனத்தினர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரஷ்ய வீரர்கள் இந்தப் பகுதியில் பேசப்படும் தாரி மொழியை நன்கு அறிந்தவர்கள். மேலும் இந்த பாமீர் மலைப் பகுதியயைஅங்குலம் அங்குலமாக அறிந்து வைத்திருப்பவர்கள்.
ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் ரஷ்யாவுடன் இணைந்து பின்லேடனைத் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, தென்பகுதியில் பிரிட்டனுடன் இணைந்து தலிபான்களைத் தாக்க உள்ளது.
இதற்காக சுமார் 500 டாங்கிகளுடன் பிரிட்டிஷ் கமாண்டோ படையினர் ஓமன் நாட்டில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications