குற்றவாளியின் மனுவை சட்டப்படி ஏற்ற அதிகாரி
மதுரை:
மண்ணெண்ணெய் கடத்தல் வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றவரின் வேட்புமனு மதுரையில் ஏற்கப்பட்டுள்ளது.
சட்டப்படிதான் மனுவை ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று இதற்கு தேர்தல் அதிகாரிவிளக்கம் அளித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி 35வது வார்டுக்கு திமுக சார்பில் போஸ் என்பவர் மனு தாக்கல்செய்திருந்தார். 1996ம் ஆண்டு மண்ணெண்ணெய் கடத்திய குற்றத்திற்காக இவருக்கு 2ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்தக் குற்றத்திற்காக ரூ.3,000 அபாரதமும்கட்டினார் இந்த போஸ்.
வேட்புமனு பரிசீலனை நடைபெற்றபோது 2 ஆண்டு காலம் சிறை தண்டனை பெற்ற போஸின்வேட்புமனுவை ஏற்கக்கூடாது என்று மாணிக்கம் மற்றும் ராமசாமி என்ற இரண்டு பேர்புகார் செய்திருந்தனர்.
இந்த மனுவின் அடிப்படையில் நேற்று (வியாழக்கிழமை) விசாரணை நடந்தது.பின்னர் திமுக வேட்பாளர் போஸின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
போஸின் வேட்புமனு ஏற்கப்பட்டது ஏன் என்பது குறித்து தெற்கு மண்டல தேர்தல்அதிகாரியும், தெற்கு மண்டல உதவி கமிஷனருமான முருகேசன் கூறுகையில்,
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள்தான் தேர்தலில்வேட்புமனு தாக்கல் செய்யமுடியாது. அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தால் அதுநிராகரிக்கப்படும்.
போசுக்கு இரண்டு ஆண்டுதான் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதனால்இவரது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 51வது பிரிவு 8 (1) மற்றும் (2)ன்படி இரண்டு வருடம்ஒருவர் தண்டனை பெற்றால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் இந்தச்சட்டம் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலுக்குத்தான் பொருந்தும்.
மாநகராட்சிக்கென உள்ள சட்டத்தை பின்பற்றி தான் போசின் மனு ஏற்கப்பட்டுள்ளது.மேலும் மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கென தனி சட்டமே உள்ளது என்றுஅவர் கூறினார்.