காஷ்மீர் தீவிரவாதிகளை கண்டுகொள்ளாத அமெரிக்கா
வாஷிங்டன்:
காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஸ்-ஏ-முகம்மத் மற்றும் லஸ்கர்-ஏ-தொய்பா உள்ளிட்ட பலதீவிரவாத அமைப்புகளை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை.
மேலும் இந்த அமைப்போலவே பல அப்பாவி மக்களைக் கொன்றுகுவித்து வரும் தீவிரவாத அமைப்புலஸ்கர்-ஏ-தொய்பா என்ற அமைப்பாகும். இவ்விரு தீவிரவாத அமைப்புகளும் பாகிஸ்தானில் இருந்துகொண்டு,அந்நாட்டின் ஆதரவுடன் செயல்பட்டுவருகின்றன.
மேலும் இந்த இயக்கங்களுக்கும் பின் லேடனுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள தலிபான்களுக்கும் நெருங்கியதொடர்புகள் உள்ளன.
இதனால் இந்த 2 அமைப்புகளையும் தீவிரவாத அமைப்புகளாக அறிவிக்கவேண்டும் என்று கடந்த சிலமாதங்களாகவே இந்தியா அமெரிக்காவிடம் வலியுறுத்திவருகிறது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலை அடுத்து,உலகம் முழுவதும் உள்ள 26 தீவிரவாத இயக்கங்களுக்கு அமெரிக்கா தடைவிதித்தது.
பின் லேடனின் தீவிரவாத இயக்கமான அல்-காய்தா இயக்கத்துடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும்வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
ஆனால் சனிக்கிழமை அமெரிக்கா வெளியிட்டுள்ள தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில், இந்தியாவரிலயுறுத்திய அந்த 2 அமைப்புகளும் சேர்க்கப்படவில்லை.
இந்தப் பட்டியலில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளில் ஹர்கத்-உல்-முஜாஹிதீன் என்றஅமைப்பு மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெறியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் போச்சர் கூறுகையில்,
இந்தியாவில் காஸ்மீர் மாநில சட்டமன்றக் கட்டத்தின் மீது கார் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியதுஜெய்ஸ்-ஏ-முகம்மத் என்ற அமைப்புதானா என்று உறுதி செய்தபின்னர், இந்த ஆண்டின் இறுதியில் அந்த அமைப்புதீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications