For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கத்தினர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை செம்பியம் பகுதியில் போலீஸாரால் பிடிபட்டது சோட்டா ஷகீல் அல்ல என்றும், மும்பையைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவர்இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்று தெரிய வந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க தாக்குதலையடுத்து இந்தியாவில் பாதுகாப்பு நிலைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு கூடுதலாக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் செம்பியம் பகுதியில் சோட்டா ஷகீல் கைது செய்யப்பட்டதாக செய்தி கிளம்பியது. ஆனால் இதை சென்னை போலீஸ்கமிஷனர் மறுத்தார். ஆனால் அங்கு கைது செய்யப்பட்டது மும்பையைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் சங்கத்தைச்சேர்ந்தவர்கள் 5 பேர் தான் என்று தெரிய வந்துள்ளது. இந்த 5 பேரும் மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் டெல்லியில் நடந்த மாநில டிஜிபிக்கள் கூட்டத்திற்குப் பிறகு, தமிழகம் முழுவதிலும் பாதுகாப்பு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுவருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள், கெடுபிடிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

கல்பாக்கம் அணு மின் நிலையம், சென்னை விமான நிலையம், சென்னைக்கு அருகேயுள்ள ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம்ஆகியவற்றிற்கு அதிகபட்ச பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையப் பாதுகாப்பு குறித்து சட்டம் ஒழுங்கு ஐஜி பாலச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் குழு நேரடியாக சென்றுபார்வையிட்டு சோதனை செய்தது. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி சூர்யபிரசாத், தமிழக டிஜிபி நெய்ல்வாலிடம் விமான நிலையபாதுகாப்பு குறித்து நேரில் சந்தித்து விளக்கினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X