விரைவில் இறுதித் தீர்ப்பு வேண்டும்- கிருஷ்ணா
பெங்களூர்:
காவிரி நதி நீர் ஆணையம் தனது இறுதித் தீர்ப்பை வெளியிட ஒரு கால நிர்ணயத்தை அறிவிக்க வேண்டும் என்றுமத்திய அரசுக்கு கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் கலந்துவிட்டு பெங்களூர் திரும்பிய அவர் கூறுகையில்,
நதி நீர் ஆணையத்தின் இறுதி முடிவுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். இந்த தாமதம் எங்களுக்குவேதனை அளிக்கிறது. இதுகுறித்து நான் பிரதமரிடமும், தலைமை நீதிபதி ஆனந்திடமும் ஏற்கனவேகூறியிருக்கிறேன்.
மத்திய அரசு இதுகுறித்து ஒரு கால நிர்ணயம் செய்யவேண்டும். அப்போதுதான் அதில் சம்பந்தப்பட்ட துறைகளைச்சேர்ந்தவர்கள் தங்கள் பணிகளை விரைந்து செயல்படுவார்கள்.
இருப்பினும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆணையம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கும் என்றுஎதிர்பார்க்கிறேன் என்றார்.
கடந்த 1990ம் ஆண்டு இந்தக் காவிர் நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது. அது தனது இடைக்காலத் தீர்ப்பைகடந்த 1991ம் ஆண்டு வெளியிட்டது.












Click it and Unblock the Notifications