நிலக்கரி வழக்கு- ஜெ. நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னை:
நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) ஜெயலலிதா 2வது தனிநீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போதுதமிழக மின்சார வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் ஊழல் செய்ததாகஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் உள்ளிட்டோர் மீது க-டந்-த திமுக அரசுவழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இரண்டாவது தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் வாக்குமூலம் அளிக்க ஜெயலலிதா நேற்று(புதன்கிழமை) ஆஜராகவேண்டும் என்று இரண்டாவது தனி நீதிமன்ற நீதிபதி தர்வேஸ் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் ஜெயலலிதா தன்னால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது. தனக்கு பதிலாக தனதுவழக்கறிஞர் பதிலளிக்க அனுமதியளிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல்செய்திருந்தார்.
இது குறித்து அரசு தரப்பில் பதில் மனு எதுவும் தாக்கல் செய்யலாம் என்-று கூ-றிவழக்கை இன்-றைக்-கு ஒத்தி வைத்தார் நீதிபதி.
அதன்-ப-டி வழக்கு விசாரணை இன்று (வியாழக்கிழமை) தொடர்ந்தது.
வியாழக்கிழமை ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி தார்வேஸ் கேட்டகேள்விகளுக்கு பதிலளித்தார்.
சாட்சிகள் கூறிய சாட்சியங்களின் அடிப்படையில் நீதிபதி 22 கேள்விகள் கேட்டார்.அனைத்து கேள்விகளுக்கும் ஜெயலலிதா பதிலளித்தார்.