மத்திய அரசு செயலிழந்துவிட்டது: சிதம்பரம்
சென்னை:
விமானம் கடத்தப்பட்டதா இல்லையா என்பது கூட தெரியாமல் பிரதமர் வாஜ்பாய் விடிய விடிய விழித்திருந்தது,அரசு செயலிழந்துவிட்டது என்பதையே காட்டுகிறது என்று காங்கிரஸ் ஜனநாயக பேரவையின் பொதுச் செயலாளர்ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களுக்கு சென்னையில் பேட்டியளித்த அவர் கூறியதாவது:
விமானம் கடத்தப்பட்டது என்ற தகவல் கிடைத்ததும் பிரதமர் விடிய விடிய விழித்திருந்தார். விமானம்கடத்தப்படவில்லை என்று தெரிந்த பின்னர்தான் நிம்மதியடைந்ததாக செய்திகள் கூறுகின்றன.
பிரதமராக உள்ள ஒருவர் விமானம் கடத்தப்பட்டதா இல்லையா என்று கூட தெரியாமல் விடிய விடியவிழித்திருந்தார் என்றால் இந்த அரசு செயலிழந்துவிட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது.
நடைபெறவிருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தல் அமைதியாக நடக்க திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஒத்துழைக்கவேண்டும். இந்த இரு கட்சிகளும் எந்தவிதமான வன்முறையிலும் ஈடுபடாமல் தேர்தல் அமைதியாக நடக்கஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications