நிலக்கரி ஊழல்: இன்று மாலை தனி நீதிமன்றத்தில் ஆஜராகிறார் ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) மாலை இரண்டாவது தனி நீதிமன்றத்தில்வாக்குமூலம் அளிக்க ஆஜாரகவுள்ளார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தமிழக மின்சார வாரியத்திற்குநிலக்கரி இறக்குமதி செய்ததில் ஊழல் செய்ததாக ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் உள்ளிட்டோர்மீது சென்ற திமுக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இரண்டாவது தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் வாக்குமூலம் அளிக்க ஜெயலலிதா நேற்று(புதன்கிழமை) ஆஜராக வேண்டும் என்று இரண்டாவதுதனி நீதிமன்ற நீதிபதி தர்வேஸ் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் ஜெயலலிதா தன்னால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது. தனக்கு பதிலாக தனது வழக்கறிஞர் பதிலளிக்கஅனுமதியளிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இது குறித்து அரசு தரப்பில் பதில் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து வழக்கை ஒத்தி வைத்தார்நீதிபதி.

வழக்கு விசாரணை இன்று (வியாழக்கிழமை) தொடர்கிறது. இந்நிலையில் ஜெயலலிதா வியாழக்கிழமை மாலைநீதிமன்றத்தில் ஆஜராவார் என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். "நீதியையும், சட்டத்தையும் மதிக்க வேண்டும்என்பதற்காக ஜெயலலிதா வியாழக்கிழமை மாலை நீதிமன்றத்தில் ஆஜராகிறார்" என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+