For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லண்டன் ஓட்டல் வழக்கில் ஜெ. சம்மனைப் பெற்றார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

லண்டன் ஓட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் கோர்ட்டில் ஆஜராகும்படி பிறப்பிக்கப்பட்டசம்மன் இன்று அவரிடம் கொடுக்கப்பட்டது.

லண்டனில் ஓட்டல்கள் வாங்கியதில் ரூ43.68 கோடி வரை சொத்துச் சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாமற்றும் சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவுசெய்தனர்.

இந்த வழக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி அசோக்குமார் முன்பு கடந்த ஜூன் 12ம் தேதிவிசாரணைக்கு வந்ததது.

ஆனால் அன்று ஆஜராகும்படி ஜெயலலிதாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டும், விசாரணை அதிகாரிகள்அவரிடம் சம்மனைக் கொடுக்கவில்லை.

பிறகு கடந்த 4ம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டும் விசாரண அதிகாரிகள் அதைக்கொடுக்கவில்லை. முன்னதாக இந்தமுறை விசாரணை அதிகாரிகள் சம்மனைக் கொடுத்துவிடுவோம் என்று எழுத்துமூலம் உறுதியளித்திருந்தனர்.

இதனால் நீதிபதி ஜெயலலிதாவும், தினகரனும் நவம்பர் 6ம் தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி மீண்டும் சம்மன்அனுப்ப உத்தரவிட்டார். இந்தமுறை சம்மனை கோர்ட் அதிகாரிதான் கொண்டுசேர்க்க வேண்டும் என்றும்,அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி இன்று (வியாழக்கிழமை) கோர்ட் அதிகாரி காளமேகம் மற்றும் அவருடன் ஒரு கிளார்க் போலீஸ்பாதுகாப்புடன் ஜெயலலிதா வீட்டுக்குச் சென்று சம்மனைக் கொடுத்தார்கள். அவரும் அதைப் பெற்றுக்கொண்டார்.மேலும் தினகரன் வீட்டுக்கும் இவர்கள் சென்று சம்மனைக் கொடுத்தார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X