"டிவியில் வன்முறைக் காட்சிகள் குறைய வேண்டும்"
சென்னை:
வன்முறை கற்பழிப்பு போன்ற காட்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதை, நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷிகூறினார்.
சென்னையில் ஒரு தனியார் டிவி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா ஒன்றில் கலந்துகொண்டு அமைச்சர்முரளிமனோகர் ஜோஷி பேசுகையில்,
சினிமாவிலும், டிவியிலும் வன்முறை மற்றும் கற்பழிப்புக்காட்சிகள் அதிகரித்துவருகின்றன. மேலும் இவைசமூதாயத்தில் நடக்கக்கூடிய இயல்பான ஒரு நிகழ்ச்சிதான் என்பதைப் போல காட்டப்படுகின்றன.
இதனால் மேற்கத்திய நாடுகளில் வாலிபர்கள் மற்றும இளைய வயதினர் குற்றங்களில் ஈடுபடுவதுஅதிகரித்துள்ளது. நம்நாட்டிற்கும் அதுபோன்ற நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது.
டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் சமூக அக்கறையுடன் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து, இதுபோன்றகாட்சிகளைக் காட்டுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றார் ஜோஷி.