கொல்கத்தா நிலக்கரி சுரங்க விபத்தில் 15 பேர் பலி
கொல்கத்தா:
கிழக்கு கொல்கத்தாவில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கம் திடீரென இடிந்துவிழுந்ததலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் 150 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தச் சுரங்கம் மிகவும் பழுதடைந்து மோசமாக இருந்ததால், அதைப் பயன்படுத்தக்கூடாது என்று அரசு உத்தரவிட்டிருந்ததது. ஆனால் சட்டத்திற்குப் புறம்பாக அந்தச் சுரங்கத்தின் முதலாளி, அதில் கரிஎடுத்து வருகிறார்.
இந்தச் சுரங்கத்தில் நேற்று (புதன்கிழமை) 150க்கும் மேற்பட்டோர் வேலை செய்துகொண்டிக்கும் போது, காலை10.00 மணியளவில் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஒரே ஒரு சுரங்கத் தொழிலாளி மட்டும்இடிபாடுகளில் இருந்து, தலையில் பலத்த காயத்துடன் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீட்பு நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை ஒருவர் தான் மீட்கப்பட்டுள்ளார்.எத்தனை பேர் உயிரிழந்தனர் அல்லது எத்தனை பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்று இன்னும்தெரியவில்லை.
இந்தச்சுரங்கத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று சில ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால்சட்டத்திற்குப் புறம்பாக அவர்கள் அதைப் பயன்படுத்தியதன் விளைவாகவே இந்தத் துயரச் சம்பவம்நேரிட்டுள்ளது.
மீட்பு பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சிலர் மட்டுமே மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களிடமும் இடிபாடுகளை அகற்றுவதற்குப் போதுமான எந்திரங்களும் கருவிகளும் இல்லை.
மேலும் இவ்வாறு தடைசெய்யப்பட்ட சுரங்கங்களைப் பயன்படுத்துவது சில ஆண்டுகளாகவே நடந்துவருகிறது.இதை ஆய்வு செய்யவேண்டிய மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கண்டுகொள்ளாமல்விட்டுவிடுவதால்தான் இதுபோன்ற விபத்துகள் நடந்துவிடுகின்றன.
கடைசியாக கிடைத்த தகவலின்படி 15 பேர் இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.