இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்றார் நைபால்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்தியரான வி.எஸ். நைபாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவருடைய முழுப்பெயர் வித்யாதர் சூரஜ்பிரசாத் நைபால். 1932ம் ஆண்டு ஆகஸ்டு 17ல் டிரினிடாட்டில் பிறந்தஇவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில பயின்றவர்.
இவர் 30க்கும் மேற்பட்ட ஆங்கில நாவல்களை எழுதியுள்ளார். 1957ம் ஆண்டு "தி மிஸ்டிக் மாசூர்" என்ற முதல்நாவலை எழுதினார்.
1977ல் "இந்தியா: காயப்பட்ட நாகரிகம்" என்ற புத்தகத்தை எழுதினார். பல நாட்டுப் பத்திரிகைகளிலும் தொடர்ந்துஎழுதி வருகிறார்.
1981ல் இவர் எழுதிய "மத நம்பிக்கைகள் - இஸ்லாம் ஒரு பார்வை" என்ற புத்தகமும் 1990ல் இவர் எழுதிய"இந்தியா: ஒரு மில்லியன் கலகங்கள்" என்ற புத்தகமும் 1998ல் இஸ்லாமிய மதமாற்றம் பற்றி இவர் எழுதியபுத்தகமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
நைபால் 1950 முதல் இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications