"வன்முறையை தூண்டினால்..." - திமுகவுக்கு ஜெ. எச்சரிக்கை
சென்னை:
உள்ளாட்சி தேர்தலின் போது கலவரத்தை தூண்டும் திமுகவினர் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றுஜெயலலிதா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுகவினர் கலவரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும, குழப்பம்விளைவிக்க திட்டமிட்டிருப்பாதகவும் கருணாநிதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார்.
இதை வன்மையாக கண்டித்துள்ளார் ஜெயலலிதா. தேர்தலின் போது கலவரத்தை தூண்டும் விதமாக நடந்துகொள்ளும் திமுகவினர் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் கடும் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் குழப்பம் விளைவிக்க திட்டமிட்டிருப்பதாக பேட்டி ஒன்றில்கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆளும் கட்சியாக. சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பிலிருக்கும் அதிமுக சட்டம், ஒழுங்கைகுலைக்கும் நடவடிக்கைகளில் எவ்வாறு ஈடுபடும்?
அதிமுக தொண்டர்களும் அது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள்.
திமுகவின் எண்ணங்களைதான் கருணாநிதி வெளியிட்டுள்ளார் தேர்தல் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாததிமுகவினர் கலவரங்களில் ஈடுபடுவார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
தேர்தலின் போது எந்த விதமான அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழக போலீசாருக்கு உதவ 71 கம்பெனி மத்திய போலீசாரை அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கருணாநிதி இது போன்று கூறி, தனது கட்சியினரை வன்முறைக்கு தூண்டிவிடுவது கண்டனத்திற்குரியது. அவர்கூறுவதை கேட்டு திமுவினர் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications