For Daily Alerts
Just In
உஸ்பெகிஸ்தானில் படைகளைக் குவிக்கிறது அமெரிக்கா
வாஷிங்டன்:
தன்னுடைய வான்பகுதியையும், ராணுவ தளங்களையும் பயன்படுத்திக் கொள்ள உஸ்பெகிஸ்தான் அனுமதிதந்துள்ளதையடுத்து, விரைவில் அந்நாட்டில் தன் துருப்புக்களையும் போர் விமானங்களையும் குவிக்கவுள்ளதுஅமெரிக்கா.
இதையடுத்து, உஸ்பெகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி,அமெரிக்கா தன்னுடைய வான்பகுதியையும், ராணுவ மற்றும் விமானத் தளங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று உஸ்பெகிஸ்தான் கூறியுள்ளது.
கடந்த 7ம் தேதியே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது என்று கூறப்படுகிறது. அன்று இரவுதான்ஆப்கானிஸ்தானைத் தாக்கத் தொடங்கியது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, அமெரிக்கா தன்னுடைய துருப்புக்களையும் போர் விமானங்களையும் விரைவில்உஸ்பெகிஸ்தானில் குவிக்கவுள்ளது.
Story first published: Saturday, October 13, 2001, 5:30 [IST]