தொடர்கிறது மழை... உயர்கிறது ஏரிகளின் நீர்மட்டம்
சென்னை:
புயல் காரணமாக சென்னையில் பெய்து வரும் அடை மழை காரணமா குடிநீர் வழங்கும் ஏரிகளில் வெகு வேகமாகநீர்மட்டம் உயர்ந்துள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள புயல் சின்னம் காரணமாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்தஇரண்டு நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் கடந்த சில நாட்களாகவே சென்னையில்தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதையடுத்து சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம்,சோழவரம் ஆகியவற்றில்
நீர்மட்டம் வெகு வேகமாக உயர்ந்து வருகிறது.
புழல் ஏயில் கடந்த இரண்டு நாட்களில் 5 செமீ மழை பெய்துள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 370 அடிஆகும். இதுதான் சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிகப் பெயது. இந்தப் பகுதியில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
இரண்டாவது பெரிய ஏரியான செம்பரம்பாக்கத்தில் 110 அடி அளவுக்கு நீரை சேமித்து வைக்கலாம். இந்தஏரியிலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
பூண்டி ஏரியில் தற்போது 20 அடி நீர் இருப்பு உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 49 அடி ஆகும். இதேபோல,சோழவரம் ஏரியிலும் தொடர்ந்து மழை பெய்வதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications