173 வாக்குச் சாவடிகளில் 19ம் தேதி மறு தேர்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் 43 வாக்குச் சாவடிகள் உள்பட தமிழகம் முழுவதும் 173 வாக்குச் சாவடிகளில் வரும் 19ம் தேதி மறுதேர்தல் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நான்கு மாநகராட்சிகள் உள்ளிட்ட ஊராட்சி அமைப்புகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் கட்டவாக்குப் பதிவு நடந்தது. இதில் பெருமளவில் வன்முறை, துப்பாக்கிச் சூடு, வாக்குச் சாவடியைக் கைப்பற்றுதல்ஆகியவை நடந்தன.

இதையடுத்து சென்னையில் வன்முறை நடந்த 43 வாக்குச் சாவடிகள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் நடந்த130 வாக்குச் சாவடிகளில் மீண்டும் தேர்தல் நடத்த மாநல தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையர் பி.எஸ்.பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில்,

19ம் தேதி இங்கு மறு தேர்தல் நடைபெறும். அப்போது வாக்காளர்களின் நடுவிரலில் மையிடப்படும்.

353 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.இருப்பினும் சம்பந்தப்பட் தேர்தல் அதிகாரிகள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே மறு தேர்தலுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை நடக்கும் இரண்டாவது கட்டத் தேர்தல் மற்றும் 19ம் தேதி நடக்கும் மறு தேர்தலின்போதுவன்முறையில் ஈடுபடும் கும்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்குமாறுகாவல்துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் முதல் கட்ட வாக்குப் பதிவின்போது 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகபட்சமாக திருவண்ணாமலை, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின.சென்னையில் 36.1 சதவீத ஓட்டுக்களே பதிவானது என்றார் பாண்டியன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+