வாஜ்பாய் இன்று சென்னை வருகை
சென்னை:
பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோர் புதன்கிழமை இரவு சென்னை வருகிறார்கள்.
பாரதீய ஜனதாக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தியின் மகன் கிருஷ்ணசாமியின்திருமணம் சென்னையிலுள்ள தாசப்பிரகாஷ் ஹோட்டலில் வியாழக்கிழமை நடக்கிறது.
திருமண வரவேற்பு புதன்கிழமை இரவு தாசப்பிரகாஷ் ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்த இரண்டுநிகழ்ச்சிகளிலும் பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.
இதற்காக பிரதமர் வாஜ்பாய், அத்வானி ஆகியோர் புதன்கிழமை இரவு சென்னை வருகிறார்கள். விமானநிலையத்திலிருந்து அவர்கள் இருவரும் நேரடியாக தாசப்பிரகாஷ் ஹோட்டலுக்குச் சென்று வரவேற்பு நிகழ்ச்சியில்கலந்துகொள்கிறார்கள். பின்னர் ஆளுநர் மாளிகைக்குச் சென்று இரவு அங்கு தங்குகின்றனர்.
வியாழக்கிழமை காலை திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர், பின்னர் டெல்லி திரும்புகிறார்.
பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஹோட்டல் அமைந்துள்ளபூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமருக்கு பாதுகாப்பு தரும் கருப்புப் பூனைப் படையின் பாதுகாப்பில் தற்போது ஹோட்டல் உள்ளது.